Tuesday, March 29, 2011
Wednesday, March 23, 2011
Tuesday, March 22, 2011
நோட்டம்
------------------
எந்தெந்த வீடு
பூட்டிருக்கிறது
என்று நோட்டம்
விட்டபடி
காவல்காரன்.
-----------------
எந்தெந்த வீடு
பூட்டிருக்கிறது
என்று நோட்டம்
விட்டபடி
காவல்காரன்.
-----------------
பொதுநலம்!!!
நலம்,
நலமறிய ஆவல்
என்றது
என் சுயநலம்
பொதுநலத்திடம்!
நீ நலமாக
இருக்கும் போது
நான் எப்படி
நலமாக இருப்பது
என்றது என் பொதுநலம்!!!
Monday, March 21, 2011
Sunday, March 20, 2011
மின்சாரமற்ற நள்ளிரவில் - 2
மின்சாரம் தடைபட
மின்விசிறி நிற்கிறது
ஆரம்பமாகிறது
உறக்கமில்லா இரவு!
இதுவரை மின்விசிறியே
இல்லாமல் தினமும்
உறங்கிய எளிய
மனிதர்களை
நினைக்கையில்
தொடர்ந்தது
நிம்மதியான உறக்கம்!!
மின்விசிறி நிற்கிறது
ஆரம்பமாகிறது
உறக்கமில்லா இரவு!
இதுவரை மின்விசிறியே
இல்லாமல் தினமும்
உறங்கிய எளிய
மனிதர்களை
நினைக்கையில்
தொடர்ந்தது
நிம்மதியான உறக்கம்!!
Friday, March 18, 2011
மின்சாரமற்ற நள்ளிரவில் - 1
1.
---------------------------------------
முதன் முறையாக
எப்படி பொழுதை போக்குவது
என்று சிந்திப்பதை
எனது பொழுதை போக்காக்கினேன்!
உறக்கமற்ற
மற்றும்
மின்சாரமற்ற
முன் இரவில்!!!
---------------------------------------
2.
வானொலி,
தொலைக்காட்சி
இருந்தும்
முதன்முறையாக
மௌனத்தின்
சப்தம் கேட்கிறேன்.
மின்சாரமற்ற ஓர் நள்ளிரவில்.!
3.
பார்த்துப்போ என்றான்
கண் தெரியாத
அறை நண்பன்...!
மின்சாரமற்ற
நள்ளிரவில்..!
4.
மனிதர்களின்
உறக்கத்தை
கெடுப்பதுடன்
நோயையும்
கொடுப்பதால்
குற்ற உணர்ச்சியுடன்
உயிரை மாய்த்துக்கொள்கிறது
கொசு
ஒரே நாளில்!!!
5.
கொசுவை
அடித்தேன்
இரத்தம்.
என்னுடையதா
கொசுவுடையதா!!?
6.
பார்த்தாயா....... ?
கொளுத்தவில்லையா.......?
மறந்துவிட்டாயா.........?
பரவாயில்லையா........?
மறுநாள்
மலேரியா....
7.
நன்றியுறை
----------------
இந்த
நள்ளிரவு எண்ணங்கள்
உருவாகக் காரணமான
- மின்சாரம் நிறுத்திய மின்சாரத்துறை
- நிசப்தம் கலைத்த & கடித்த கொசுக்கள்
- மௌனம் உணர்த்திய செவிகள்
ஆகியோருக்கு
நன்றிகள்!!!
Subscribe to:
Posts (Atom)


