Wednesday, April 6, 2011

நீ நீயாக இரு

--

எப்போதும்
முழுமையான
சகிப்புத்தன்மையுடன்
இருந்து விடாதே

அவ்வப்போது
கோபப்படு
எரிச்சல்படு

கடந்தகாலத்தில்
சகிப்புத்தன்மையுடன்
இருந்ததின் பலன்
உன்னை
நல்லவனாக
எதிர்பார்க்கப்படும்

நினைப்பு

உனக்கு மிகப்பெரிய
சுமை!!!


--

1 comment:

  1. அந்த சுமைதாங்கி தான் நானும்!

    ReplyDelete