Wednesday, March 23, 2011

வரதட்சிணை


நீராவியை
வரதட்சிணையாகக் கேட்டு
மழையை
தாய்பூமிக்கு
அனுப்பியது
வானம்!

மனித மகன்கள்
இயற்கை வளங்களை
சுயநலத்திற்காக
சூதாடி அழித்ததால்
தர இயலாமல் பூமி!

சினத்தில்
மழையை
அனுப்புவதைக்
குறைத்துக்கொண்டது
வானம்!

இப்பிரச்சினை
தொடரும்
மகன்கள்
இயற்கைவளத்தை
பெருக்கும் வரை.!!!!

2 comments:

  1. அழகான் பயனுள்ள் சிந்தனை பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நன்றி நிலாமதி அவர்களே...

    ReplyDelete