1.
---------------------------------------
முதன் முறையாக
எப்படி பொழுதை போக்குவது
என்று சிந்திப்பதை
எனது பொழுதை போக்காக்கினேன்!
உறக்கமற்ற
மற்றும்
மின்சாரமற்ற
முன் இரவில்!!!
---------------------------------------
2.
வானொலி,
தொலைக்காட்சி
இருந்தும்
முதன்முறையாக
மௌனத்தின்
சப்தம் கேட்கிறேன்.
மின்சாரமற்ற ஓர் நள்ளிரவில்.!
3.
பார்த்துப்போ என்றான்
கண் தெரியாத
அறை நண்பன்...!
மின்சாரமற்ற
நள்ளிரவில்..!
4.
மனிதர்களின்
உறக்கத்தை
கெடுப்பதுடன்
நோயையும்
கொடுப்பதால்
குற்ற உணர்ச்சியுடன்
உயிரை மாய்த்துக்கொள்கிறது
கொசு
ஒரே நாளில்!!!
5.
கொசுவை
அடித்தேன்
இரத்தம்.
என்னுடையதா
கொசுவுடையதா!!?
6.
பார்த்தாயா....... ?
கொளுத்தவில்லையா.......?
மறந்துவிட்டாயா.........?
பரவாயில்லையா........?
மறுநாள்
மலேரியா....
7.
நன்றியுறை
----------------
இந்த
நள்ளிரவு எண்ணங்கள்
உருவாகக் காரணமான
- மின்சாரம் நிறுத்திய மின்சாரத்துறை
- நிசப்தம் கலைத்த & கடித்த கொசுக்கள்
- மௌனம் உணர்த்திய செவிகள்
ஆகியோருக்கு
நன்றிகள்!!!
அருமையான வரிகள் பாராட்டுக்கள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
தமிழ்த்தோட்டத்திற்கு இந்த அரும்பின் நன்றிகள்..
ReplyDeleteசிந்தனைப் பகிர்வுகள் அருமை
ReplyDeleteநன்றி நிலாமதி அவர்களே..
ReplyDelete