Monday, April 11, 2011

மின்வெட்டு



மாலை
வேளைகளில்
நேரம்
கிடைக்கிறது
குடும்பத்தினருடன் பேச
தொலைக்காட்சி
பார்க்கமுடியாததால்

--

மின்சாரமற்ற முன் இரவில்!!!















மாலையில்
வீடு திரும்பும்
வேளையில்
மின்சார நிறத்தம்

தொலைக்காட்சி பார்க்க
முடியவில்லை

வானொலி கேட்க
முடியவில்லை

சார்ஜ் இல்லாததால்
சக அலுவலருடனோ
நண்பருடனோ பேச
முடியவில்லை

ஆக பொழுதைப்போக்க
பேசிக்கொண்டிருந்தேன்
என் குடும்பத்துடன்!!!

--

Sunday, April 10, 2011

தனிமை -1













*
வீட்டின் அருகே
விழந்த
மழைத்துளை
எண்ணிக்
கொண்டிருந்தேன்
உடன்
மற்ற
மழைத்துளிகள்!!!

--

*
யாருமற்ற
என் வீட்டில்
நான் மட்டும்
பயமாக இருந்தது
யாராவது
கலைத்துவிடுவார்களோ
என் தனிமையை!!!


--

*
வீட்டில்
நான் மட்டும்
பேசிக்கொண்டிருக்கிறேன்
என்
மௌனத்துடன்



---

Friday, April 8, 2011

அறிவிலி

ஆழமான
அறிவில்லாத
ஆத்திகன்
நாத்திகனாகிறான்
அவன் இழக்கும்
ஒவ்வொரு
உறவுகளின் போதும்..

Wednesday, April 6, 2011

நழுவிய செல்போன் : - (

குறிப்பு: சில்லென்று ஒரு காதல் படத்தில் நியுயார்க் நகரம் பாடல் மெட்டுடன் படிக்கவும்...


சென்னை நகரம், நகரும் நேரம்
செல்லும் நழுவியது, நீரில் விழுந்தது

சார்ஜூம் இறங்கியே செல்லும் உயிரை இழந்தது
நண்பர்கள் இல்லா அலுவலகத்தின் உள்ளே
நானும் சிம் கார்டும்,
தனிமை தனிமையோ..
கொடுமை கொடுமையோ..


(Man Repeat)
--
சென்னை நகரம், நகரும் நேரம்
செல்லும் நழுவியது, நீரில் விழுந்தது

சார்ஜூம் இறங்கியே செல்லும் உயிரை இழந்தது
நண்பர்கள் இல்லா அலுவலகத்தின் உள்ளே
நானும் சிம் கார்டும்,
தனிமை தனிமையோ..
கொடுமை கொடுமையோ..
--


விதவிதமாய் ரிங்டோன்ஸ் மூலம், என்னை மகிழ்விக்க
நீ இல்லை..

தினமும் ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஒரு மெஸேஜ் கொடுக்க
நீ இல்லை..

தினம் நிகழும் சம்பவங்களை ஒரு போட்டோ எடுக்க
நீ இங்கு இல்லை..

அவசியமான் நேரத்தில் ஒரு கால் பண்ண
நீ இங்கே இல்ல்ல்ல்லைய்ய்ய்ய.....

செல்லும் இல்லை, சார்ஜூம் இல்லை, இந்த நேரத்தில்
என் போன் பில் எல்லாமும் குறைந்ததென்ன மாயம்

செல் இங்கே, பேட்டரி எங்கே இந்த உவமைக்கு
நாம் இருவரும் இலக்கணம் ஆனதேனோஓஓஓஓ......


(choros - women)
--
சென்னை நகரம், நகரும் நேரம்
செல்லும் நழுவியது, நீரில் விழுந்தது
--


இன்பாக்ஸில் தினமும் சில மெஸேஜ் டைப் பண்ணும் என் கைகள்
தகவல் அனுப்பியதும் மெஸேஜ் செல்லும் வேகம் என்ன ஜெட்டா...

பார்க்க அழகாக செல் இருந்தும் இந்த தருணத்தில்
செல்லும் சிப்பும் வொர்க் ஆகாமல் போனதேனோ...

நான் சென்ற இடங்களில் நீயும் இருந்தால்
டவர் குறைந்த இடங்களில் கூட சிக்னல் கிடைக்குமே...


(choros - women)
--
சென்னை நகரம், நகரும் நேரம்
செல்லும் நழுவியது, நீரில் விழுந்தது

சார்ஜூம் இறங்கியே செல்லும் உயிரை இழந்தது
நண்பர்கள் இல்லா அலுவலகத்தின் உள்ளே
நானும் சிம் கார்டும்,
தனிமை தனிமையோ..
கொடுமை கொடுமையோ..
--

நந்தவனம்

வறண்ட
பாலைவனத்தில்

விழுந்தது
ஒரு
சிரிப்பூ

மலர்ந்தது
ந்
!!!

நீ நீயாக இரு

--

எப்போதும்
முழுமையான
சகிப்புத்தன்மையுடன்
இருந்து விடாதே

அவ்வப்போது
கோபப்படு
எரிச்சல்படு

கடந்தகாலத்தில்
சகிப்புத்தன்மையுடன்
இருந்ததின் பலன்
உன்னை
நல்லவனாக
எதிர்பார்க்கப்படும்

நினைப்பு

உனக்கு மிகப்பெரிய
சுமை!!!


--

தந்தை!!


ஒரு மௌன யுத்தம்
நிகழந்துகொண்டே இருக்கிறது
வயதான
மகனுக்கும்
தந்தைக்கும்

------


குடும்ப தலைவன்
பதவிக்கான
போட்டியில்
சில நேரங்களில்
மகன்
சர்வாதிகாரியகவே
மாறிவிடுகிறான்

தந்தை
நடத்தப்படுகிறார்
ஒரு முன்னாள்
சர்வாதிகாரியைப் போல்!!

Tuesday, March 29, 2011

முயற்சி

வெற்றியாளனுக்கும்
தோல்வியடைபவனுக்கும்
வித்தியாசம்
சிறிதளவே!

அதிக "சிறிதளவு முயற்சியில்"
சற்றே "அதிக உழைப்பில்"

கனவு காண்பவனுக்கு வெற்றி
அதிக கனவு கண்டவன்
என்பதில் மட்டுமே!

உழைத்தவனுக்கு
எத்தனை வெற்றி
என்பதில்!!!

Wednesday, March 23, 2011

விருந்து


சிறை நிரப்பும்
போராட்டம்
திருமண விருந்து!!!



 

போராட்டம்


 உள்ளிருப்பு
போராட்டம்
     தாழ்வு மனபான்மை!!


 

வரதட்சிணை


நீராவியை
வரதட்சிணையாகக் கேட்டு
மழையை
தாய்பூமிக்கு
அனுப்பியது
வானம்!

மனித மகன்கள்
இயற்கை வளங்களை
சுயநலத்திற்காக
சூதாடி அழித்ததால்
தர இயலாமல் பூமி!

சினத்தில்
மழையை
அனுப்புவதைக்
குறைத்துக்கொண்டது
வானம்!

இப்பிரச்சினை
தொடரும்
மகன்கள்
இயற்கைவளத்தை
பெருக்கும் வரை.!!!!

Tuesday, March 22, 2011

நோட்டம்

------------------


எந்தெந்த வீடு
பூட்டிருக்கிறது
என்று நோட்டம்

விட்டபடி

காவல்காரன்.

-----------------

காத்திருப்பு


-----
உன் மௌனம்
கலைவதற்காக
காத்திருக்கிறேன்

I.C.U.வின் வெளியே



-----

பொதுநலம்!!!


நலம்,
நலமறிய ஆவல்
என்றது
என் சுயநலம்
பொதுநலத்திடம்!


நீ நலமாக
இருக்கும் போது
நான் எப்படி
நலமாக இருப்பது
என்றது என் பொதுநலம்!!!

Monday, March 21, 2011

யுகம்

------------------
ஒவ்வொரு
நொடியும்
யுகமாகிறது
ஐ.சி.யு (I.C.U) வின் வெளியே !

Sunday, March 20, 2011

மின்சாரமற்ற நள்ளிரவில் - 2

மின்சாரம் தடைபட
மின்விசிறி நிற்கிறது
ஆரம்பமாகிறது
உறக்கமில்லா இரவு!

இதுவரை மின்விசிறியே
இல்லாமல் தினமும்
உறங்கிய எளிய
மனிதர்களை
நினைக்கையில்
தொடர்ந்தது
நிம்மதியான உறக்கம்!!

Friday, March 18, 2011

மின்சாரமற்ற நள்ளிரவில் - 1















1.
---------------------------------------
முதன் முறையாக
எப்படி பொழுதை போக்குவது
என்று சிந்திப்பதை
எனது  பொழுதை போக்காக்கினேன்!

உறக்கமற்ற
மற்றும்
மின்சாரமற்ற
முன் இரவில்!!!
---------------------------------------

2.

வானொலி,
தொலைக்காட்சி
இருந்தும்
முதன்முறையாக
மௌனத்தின்
சப்தம் கேட்கிறேன்.
மின்சாரமற்ற ஓர் நள்ளிரவில்.!

3.
பார்த்துப்போ என்றான்
கண் தெரியாத
அறை நண்பன்...!
மின்சாரமற்ற
நள்ளிரவில்..!

4.
மனிதர்களின்
உறக்கத்தை
கெடுப்பதுடன்
நோயையும்
கொடுப்பதால்
குற்ற உணர்ச்சியுடன்
உயிரை மாய்த்துக்கொள்கிறது
கொசு
ஒரே நாளில்!!!


5.
கொசுவை
அடித்தேன்

இரத்தம்.
என்னுடையதா
கொசுவுடையதா!!?


6.
பார்த்தாயா....... ?
கொளுத்தவில்லையா.......?

மறந்துவிட்டாயா.........?
பரவாயில்லையா........?
மறுநாள்
மலேரியா....


7.
நன்றியுறை
----------------
இந்த
நள்ளிரவு எண்ணங்கள்
உருவாகக் காரணமான
- மின்சாரம் நிறுத்திய மின்சாரத்துறை
- நிசப்தம் கலைத்த & கடித்த கொசுக்கள்
- மௌனம் உணர்த்திய செவிகள்
ஆகியோருக்கு
நன்றிகள்!!!


 

Monday, March 14, 2011

வாதங்கள் !

வாதங்கள்
வேண்டாத விவாதங்களாகும் போது
ஒரு தரப்பின் மௌனம்
முடிவை மட்டும்
தருவதில்லை
மற்றொரு தரப்பிற்கு
குற்ற உணர்ச்சியையும்
ஏற்படுத்திவிடுகிறது
அவர் பக்கம்
நியாமிருந்தும்!!!

எதிர்பார்ப்பு !

-------------------
எதிர்பார்ப்புகள்
ஏமாற்றும் போது
இன்னும்
சிரத்தை எடுக்கிறேன்
என் கடமைகளில்
எந்த எதிர்பார்ப்புமின்றி

வட்டியும் முதலுமாக
வந்தடைகிறது
கடமையின் பலனும்
இழந்த எதிர்பார்ப்புகளும்!!!

சிந்தித்த போது சிந்தியவை -3

கடமை
-------
மற்றவர்கள்
தம்
கடமைகளிலிருந்து
தவறும் போது
இன்னும்
கவனமாகிறேன்
என்
கடமைகளில் !!!


குறை
----------
மற்றவர்களின்
குறைகளை
குறை சொல்லும்
தருணத்தில்
மறந்துவிடுகிறோம்
நம்முடைய
குறைகளையும்
மற்றும்
குறை சொல்வதும்
ஒரு குறை என்பதையும்!
சந்தர்ப்பம்
-------------------
சந்தர்ப்பம் அமையும்போது
தவறுகளை திருத்திக்கொள்ள
தவறினால்
மற்றொரு சந்தர்ப்பத்தில்
தவறுகளை
தவிர்க்க முடியாது!

தத்துவம்
----------------
தத்துவங்கள்
தவறாமல்
தரிசனம்
தருகிறது
தவறு
நடந்தபிறகு !

சகிப்புத்தன்மை!

---------------------------
சில சமயம்
சகிப்புத்தன்மை
இல்லாததை
சகித்துக்கொள்ள
நேரிடுகிறது !

தயக்கம்!

---------------
தயக்கங்களை
தகர்க்க
முற்பட்ட போது
சிறிது

தயக்கமாகவே
இருக்கறது!


-செல்வன்

அடைமழை!


தொடர்ந்து அடைமழை!
மகிழ்ச்சியாக இருந்தது
நான் வசிக்கும் பகுதி
இடுப்பளவு மூழ்கும்வரை!

சிந்தித்த போது சிந்தியவை -II

சிந்தித்த போது சிந்தியவை -II
-------------------------------------------ஜென் தத்துவம்:
ஓருவன் இறக்கையில்
சந்தோஷப்படுங்கள் !
வேட்டுடனும்,
புன்னகையுடனும்
நடனம்
சவ ஊர்வலத்தில்!
--------------------------------------------------------
வாடிய மலர்
மீண்டும் மலர்வதர்க்காக
காத்திருக்கிறது
விதவை !
----------------------------

-  செல்வன்

சிந்தித்த போது சிந்தியவை - I

நொடிக்கு நொடி
உருமாறும்
பச்சோந்தி
மேகம் !

---------------------------------------
இயற்கை வரையும்
Modern Art
மேகங்கள் !

---------------------------------------
எழுதிய பிறகு மீண்டும் சிந்தித்த போது....

வான் வரையும்
நவீன ஓவியம்
மேகங்கள் !
----------------------------------------


- செல்வன்

என் எண்ணங்களுடன்....

என் எண்ணங்களுடன் ஓத்துபோகும் ஓரு எதிரி
(அ)
என் எண்ணங்களுடன் முரண்பாடும் ஓரு நண்பன்

என் கனவுகளுடன் ஓத்துபோகும் ஓரு எதிரி
(அ)
என் கனவுகளுடன் முரண்பாடும் ஓரு நண்பன்

என் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் ஓரு எதிரி
(அ)
என் சந்தேகங்களுக்கு முரண்பாடும் ஓரு நண்பன்


என் கவிதைகளுக்கு உற்சாகமஊட்டும் ஓரு எதிரி
(அ)
என் கவிதைகளுக்கு விமர்சனம் செய்யும் ஓரு நண்பன்

அல்லது

சற்றே என் இணைய தளத்தில், இளைப்பாறும் பார்வையாளன்
யாவருக்கும் என் வந்தனங்கள் !

நட்புடன்
-எதிரி